கட்டிட வேலையில் நடந்த பயங்கரம்... திடீரென இடிந்து விழுந்த சுவர் - பரிதாபமாக பலியான உயிர்...

x
  • திருச்செங்கோடு சூரியம்பாளையம் பகுதியில், பழைய கட்டிடத்தை இடித்து கொண்டிருந்த போது சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
  • திருச்செங்கோடு சூரியம்பாளையம் ஏழாவது தெரு பகுதியை சேர்ந்த சங்கரநாராயணன் என்பவருக்கு சொந்தமான பழைய வீடு ஒன்று இடிக்கப்பட்டு வந்தது.
  • அப்போது சுபாஷ் கோபி என்ற நபர், கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்ட போது சுவர் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது.
  • இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி சுபாஷ் கோபி படுகாயம் அடைந்தார். இது குறித்து தகவலறிந்த, திருச்செங்கோடு தீயணைப்புத் துறை அலுவலர் குணசேகரன் தலைமையிலான தீயணைப்பு சுபாஷ் கோபியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
  • ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
  • இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்