ஓய்வு பெற்ற மறுநாளே ஓடும் ரயிலில் செல்போனால் பிரிந்த உயிர்

x
  • திண்டிவனம் ரயில் நிலையத்தில், ரயிலில் இருந்து தவறி விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • விழுப்புரத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவர், செங்கல்பட்டு அருகே தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
  • இந்நிலையில், நேற்றைய தினம் ஓய்வு பெற்ற இவர், தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் செல்லும் ரயிலில் சென்று கொண்டிருந்தார்.
  • அப்போது, திண்டிவனம் ரயில் நிலையத்தில், ரயில் நின்று கிளம்பிய போது இவரது செல்போன் கீழே தவறி விழுந்ததாக தெரிகிறது.
  • இதனை எடுக்க அவர் ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய போது, ரயிலுக்கு இடையே சிக்கி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
  • தகவலறிந்த போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்