சாலையில் போய் கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் ஆட்டோ டிரைவர் மரணம் - திண்டிவனத்தில் அதிர்ச்சி

x
  • திண்டிவனத்தில், ஓடும் ஆட்டோவில் ஓட்டுநர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • திண்டிவனம் மேம்பாலம் பகுதியில், சென்று கொண்டிருந்த ஆட்டோவை சாலையோரம் நிறுத்திய ஓட்டுநர், நெஞ்சுவலியால் துடித்ததுடன், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
  • இதனை பார்த்த பொதுமக்கள், 108 ஆம்புலன்சுக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.
  • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • விசாரணையில், மாரடைப்பால் உயிரிழந்தவர் சென்னை சைதாப்பேட்டை காவேரி நகரைச் சேர்ந்த முனுசாமி என்பது தெரியவந்தது.

Next Story

மேலும் செய்திகள்