"கோயில் நிலத்தை ஆக்கிரமித்த பாஜக பிரமுகர்".. அதிரடியாக அகற்றிய அறநிலையத்துறை - திருவண்ணாமலையில் பரபரப்பு

• இந்த மடத்தின் முன்பகுதியில் கோயில் மேம்பாடு மற்றும் ஆன்மீக பிரிவின் பாஜக மாநில துணை தலைவர் வழக்கறிஞர் சங்கர் என்பவர் சுமார் 23 ஆயிரத்து 800 சதுர அடி பரப்பளவை ஆக்கிரமித்து கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. • இது தொடர்பாக அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இந்த ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற திருவண்ணாமலை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் சங்கரின் வீடு மற்றும் கார் பார்க்கிங் பகுதியை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அகற்றியது. • அம்மனியம்மன் மடத்தினை அதிகாரிகள் சீல்வைத்து பூட்டினர். • இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணியினர் போராட்டத்தில் இறங்கிய நிலையில், போலீசார் குவிக்கப்பட்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com