ஆட்சியர் அலுவலகத்தில் தசு புசுன்னு இங்கிலிஷ் "டாஸ்மாக் மூடியதால் எவ்ளோ லாஸ் தெரியுமா?" - வேதனை தெரிவித்த மதுபிரியர்கள்

• திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், படவேடு சாலையில் இருந்த டாஸ்மாக் கடை சமீபத்தில் அகற்றப்பட்டது. • இதையடுத்து விநாயகபுரம் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க இடம் தேர்வான நிலையில், ஆரணி வட்டாட்சியரிடம் டாஸ்மாக் அமைக்க வேண்டாம் என பெண்கள் மனு அளித்தனர். • இந்நிலையில் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மதுப்பிரியர்கள், டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். • மேலும் டாஸ்மாக் கடையை அகற்றியதால் அரசுக்கு 35 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மதுப்பிரியர்கள் வேதனை தெரிவித்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com