மாணவி ஏறிக்கொண்டிருந்த நொடியில்... அதிவேகத்தில் மோதிய தனியார் பேருந்து - உள்ளிருந்து அலறிய கல்லூரி மாணவிகள்

x

திருத்தணி அருகே மகளிர் கல்லூரி பேருந்து மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில், 25க்கும் மேற்பட்ட மாணவிகள் காயமடைந்தனர்.

அரக்கோணம் சாலை ஜே.ஜே. நகர் பகுதியில் மாணவியை ஏற்றிக்கொண்டிருந்த மகளிர் கல்லூரி பேருந்து மீது, அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதியது.

இதில் 25க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுக்கும், 5க்கும் மேற்பட்ட பேருந்து பயணிகளுக்கும் காயம் ஏற்பட்டது.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், தனியார் பேருந்து ஓட்டுனரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்