"டேய்..! என்னடா கேட்ட"... குடித்த பழச்சாறுக்கு பணம் கேட்ட கடைக்காரர் - சரமாரியாக தாக்கிய காவலர்

x
  • திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள ஜூஸ் கடையில், பாண்டியன் என்ற காவலர் எப்போது பணம் கொடுக்காமல் பழச்சாறு குடித்து வந்ததாக கூறப்படுகிறது.
  • இந்நிலையில் தன் நண்பர்களுக்கும் பழச்சாறு வாங்கி கொடுத்துவிட்டு, அவர் பணம் கொடுக்காமல் செல்ல முயன்றுள்ளார்.
  • இதன் காரணமாக அதிருப்தி அடைந்த கடைக்காரர், காவலரிடம் பணம் கேட்டுள்ளார்.
  • இதனால் ஆத்திரமடைந்த காவலர் சரமாரியாக தாக்கியதில், கடைக்காரர் காயமடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் கடைக்காரர் அனுமதிக்கப்பட்ட நிலையில், காவலர் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்