ஆடல், பாடல் நிகழ்ச்சிக்காக மின்சாரம் திருட்டு

x

கரூரில், அனுமதியின்றி நடைபெற்ற ஆடல், பாடல் நிகழ்ச்சிக்காக, மின்சாரம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காந்திகிராமம் EB காலனி பகுதியில் உள்ள நாகேஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக மின் தேவை பூர்த்தி செய்யும் வகையில் ஜெனரேட்டர் பயன்படுத்தாமல், அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்து, ஒயர் (wire) மூலமாக மின்சாரம் திருடப்பட்டது. இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்