ஏடிஎம்-ல் ரூ.100 நோட்டு வராத‌தால் ஆத்திரம்..இயந்திரத்தை நொறுக்கிய இளைஞர்

x

சாத்தான்குளம் அருகே பேய்குளம் பகுதியில் கனரா வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்தில் கடந்த சில மாதங்களாக 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் வராத‌தால், சிறு தேவைகளுக்கு பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் தவித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஹென்றி என்ற இளைஞர், ஏடிஎம் இயந்திரத்தில் நூறு ரூபாய் எடுக்க முயன்றுள்ளார். ஆனால், நூறு ரூபாய் நோட்டுகள் ஏடிஎம் இயந்திரத்தில் இல்லாத‌தால், கனரா வங்கி ஊழியர்களிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளார். ஆனால், வங்கி ஊழியர்கள் அலட்சியமாக பதில் அளித்த‌தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர் ஏடிஎம் இயந்திரத்தை அடித்து நொறுக்கியுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து, ஹென்றியை கைது செய்த சாத்தான்குளம் போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்