இறந்த கணவர் உடலை 18 மாதமாக வீட்டில் வைத்திருந்த மனைவி.. மீண்டு வர கங்கை நீர் தெளிப்பு

x

கடந்த ஆண்டு இறந்த கணவர் கோமாவில் இருப்பதாக கருதி அவரது சடலத்தை வீட்டிலேயே மனைவி வைத்திருந்த அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் நிகழ்ந்துள்ளது.

வருமானவரித்துறையில் பணியாற்றிய விம்லேஷ் தீட்சித் கடந்த ஆண்டு இறந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், அவரது மனைவி உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யாமல், கணவர் கோமாவில் இருப்பதாக கூறி வந்துள்ளார்.

கோமாவில் இருக்கும் கணவர் குணமடைய வேண்டி தினமும் அவரது சடலத்தின் மீது கங்கை நீரை தெளித்துள்ளார்.

இவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதனடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தீட்சித் மரணித்தது தெரிய வந்தது.

உடனடியாக அவரது இல்லத்திற்கு போலீசார் மற்றும் மருத்துவர்கள் விரைந்தனர்.

பாசத்தால் மதியிழந்த மனைவியிடம் இருந்து போராடி அழுகிய நிலையில் இருந்த தீட்சித் உடலை மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்