"கால்ல விழுந்தாவது ஹெல்ப் பண்றேன்" - எஸ்ஐ மக்களிடம் பேசிய வீடியோ வைரல்

x

திருடனைக் கூட மன்னித்து விடுவேன், ஆனால், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோரை மன்னிக்கவே மாட்டேன் என்று காவல் உதவி ஆய்வாளர் பேசும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம், பென்னலூர்பேட்டை அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு காவல் உதவி ஆய்வாளர் பரமசிவம் சென்றபோது, அங்கு மாணவர்கள் வருகை குறைவாக இருப்பது குறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்டுள்ளார். அதற்கு, அந்தப் பகுதியில் வசிக்கும் இருளர் இன மக்கள், தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை என்று தலைமை ஆசிரியர் கூறியுள்ளார். இதையடுத்து அந்த பகுதிக்குச் சென்ற உதவி ஆய்வாளர், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்