பள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவி... வாக்குமூலத்தால் அதிர்ந்த போலீசார்... வெளியான பரபரப்பு வீடியோ

x

குளித்தலை அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர், திடீரென பள்ளியின் மாடியில் இருந்து குதித்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.

இதில், மாணவி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் ஆய்வு செய்தனர். பின் மருத்துவமனைக்கு சென்று மாணவியிடம் விசாரிக்கையில், மாணவி தெரிவித்த வாக்குமூலத்தால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

மாணவியின் பள்ளிகூடத்தில் 2 நாட்களாக கலை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதனால், மாணவியர்கள் சிலர் பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்துள்ளனர்.

அப்போது சக மாணவி ஒருவர் அவரின் செல்போனை கொடுத்து தன்னை புகைப்படம் எடுக்க கூறியதாவும், தான் மறுத்தும் தன்னிடம் செல்போனை கொடுத்ததாகவும் மாணவி கூறியுள்ளார்.

மாணவியின் கையில் செல்போனை கண்ட ஆசிரியர்கள் மாணவியை அழைத்து திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்து பள்ளியின் மாடியில் இருந்து குதித்தாக மாணவி அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்