புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் சில்மிஷம் பாராட்டு சான்றிதழ் வாங்கிய ரெண்டே நாளில் வசமாக சிக்கிய SI

x

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில், உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

விளாத்திக்குளம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக சுதாகர் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த பெண் ஒருவரின் கைபேசி எண்ணை, அவரது புகாரில் மனுவில் இருந்து எடுத்த சுதாகர், அவரிடம் ஆபாசமாக போனில் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண்ணின் கணவர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் புகார் அளித்தார். அதன் பேரில், காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுதாகரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். கடந்த 2 தினங்களுக்கு முன்புதான், உதவி ஆய்வாளர் சுதாகருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்