மூதாட்டியிடம் பணத்தை திருடிய முதியவர்..சரமாரியாக வெச்சு அடித்த பெண்கள் - கையெடுத்து கும்பிட்ட முதியவர்

x

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்யும் மூதாட்டியிடம் பணத்தை திருடிய முதியவரை அங்கிருந்த பெண்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

மாமாந்தூரைச் சேர்ந்த இருசாயி என்ற மூதாட்டி கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் கீரை வியாபாரம் செய்து வருகிறார்... வியாபாரம் முடித்து வீட்டுக்குத் திரும்ப தயாரான போது, முதியவர் ஒருவர் மூதாட்டி வைத்திருந்த பணத்தைத் திருடியதாக கூறப்படுகிறது... இது குறித்து மூதாட்டி அருகில் இருந்தவர்களிடம் கூறவே, அங்கிருந்தவர்கள் அந்த முதியவரைக் கடுமையாக தாக்கி காவல் நிலையம் அழைத்து சென்றனர்... கீரை விற்று பிழைப்பு நடத்தி சம்பாரித்த பணத்தை திருடியதால் மூதாட்டி கோபம் அடைந்த நிலையில், வயதான காலத்தில் வறுமையின் பிடியில் பணத்தை திருடி விட்டு முதியவர் அடி வாங்கிய வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.


Next Story

மேலும் செய்திகள்