4 ஆண்டுகளாக கொடுமைப்படுத்திய கணவன்..விரக்தியில் மனைவி எடுத்த கோர முடிவு..வெளியான அதிர்ச்சி தகவல்

x

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே, இளம்பெண் தூக்கிட்டபடி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், துணை ஆட்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளார். திருக்காடுதுறையை சேர்ந்த பூபேஸ், அவரது மனைவி காயத்ரி. இருவருக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில், மதுப்பழக்கம் உள்ள பூபேஸ்,அடிக்கடி தனது மனைவியை அவரது வீட்டில் நகை வாங்கி வரும்படி தகராறில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது. நேற்றிரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து, விரக்தியில் இருந்த காயத்ரி இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. காயத்ரியின் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், அவரது உயிரிழப்பில் சந்தேகமிருப்பதாக அவரது குடும்பத்தார் கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்