தகராறை தட்டிக்கேட்ட தாத்தாவை - மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த பேரன் | Thiruvarur

x

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே, மதுவுக்கு அடிமையானதை தட்டிக்கேட்ட தாத்தாவை, தீவைத்துக் கொளுத்திய பேரனை போலீசார் கைது செய்தனர்.

எரவஞ்சேரி பகுதியை சேர்ந்த முகிலன் என்ற இளைஞன், மதுபோதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.

மதுபோதையில், தந்தை லட்சுமணனுடன் முகிலன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு நடக்கவே, அதனை தட்டிக் கேட்ட தாத்தா ரேனையன் மீது முகிலன் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தியுள்ளார். 40 சதவீத தீக்காயங்களுடன் படுகாயமடைந்த முதியவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்