தங்கச் செயினை பறித்து விட்டு ஆற்றில் தள்ளிவிட்ட கும்பல் - 2 நாட்கள் ஆற்றிலேயே கிடந்த ஆசிரியர்

x

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே, 2 நாட்களாக ஆற்றில் தத்தளித்து வந்த அரசுப்பள்ளி ஆசிரியை, தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

திருவையாறு அருகே பள்ளியக்கரஹாரம் வெண்ணாற்று பகுதியில், அரசுப்பள்ளி ஆசிரியை ரேவதி என்பவரிடம், மர்மநபர்கள், கழுத்தில் அணிந்திருந்த இருந்த தங்கச் செயினை பறித்ததுடன், அவரை ஆற்றில் தள்ளி விட்டுச் சென்றுள்ளனர்.

இதில், ஆற்றின் ஓரம் இருந்த முட்புதரில் சிக்கிய அவர், 2 நாட்களாக உயிருக்குப் போராடியுள்ளார்.

இதனிடையே அந்த வழியாக சென்ற பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் அளித்ததை அடுத்து, தீயணைப்பு வீரர்களும் அந்தப் பகுதிக்கு விரைந்தனர்.

பின்னர், ஆசிரியை ரேவதி பத்திரமாக மீட்கப்பட்டார்.

மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்