அரசு பேருந்தில் பெண்களை ஏற்றாமல் அலட்சியமாக சென்ற டிரைவர்... ஆத்திரமடைந்த பெண்கள் - பரபரப்பு காட்சிகள்

x

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, கூலி வேலைக்கு செல்லும் பெண்களை அரசு பேருந்தில் ஏற்ற மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையம், பாவூர்சத்திரம் பகுதிகளில் ஏராளமான பெண்கள் விவசாய வேலைகளுக்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில், கொண்டலூர் கிராமத்தில் தினக்கூலி பெண்களை அரசு பேருந்து ஓட்டுநர், பேருந்தில் ஏற்ற மறுத்து அலட்சியமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்