பளுதூக்கி வரும் போது தெருவில் விளையாடிய குழந்தைகள்... கவனமாக செயல்பட்டு சகோதரிகளை காப்பாற்றிய நெகிழ்ச்சி

x

சீனாவில் தெருவில் நின்ற குழந்தைகளை காப்பாற்ற பளு தூக்கியை குழந்தை ஒருவர் நிறுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குவாங்டாங் மாகாணத்தில் உள்ள மாமிங் பகுதியில், 2 குழந்தைகள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தன.

அப்போது, ஃபோர்க்லிப்ட் எனப்படும் பளு தூக்கி அங்கு வந்த‌து.

இதைக் கண்ட குழந்தைகளின் சகோதரியான மற்றொரு குழந்தை, குறுக்கே சென்று பளு தூக்கியை கையை காட்டி நிறுத்தியதோடு, தனது சகோதரிகளை வீட்டுக்குள் பத்திரமாக அனுப்பினார்.

இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்