கண் முன்னே உயிருக்கு போராடிய குழந்தைகள் - கை இல்லாததால் காப்பாற்ற முடியாமல் தந்தை கதறிய சோகம்

x

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே, கிணற்றில் நீச்சல் பழகிய போது, தந்தையின் கண் முன்னே இரு குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேயம்பட்டியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு இரு கைகள் இல்லாத நிலையில், தனது 8 வயது மற்றும் 6 வயது குழந்தைகளுக்கு நீச்சல் கற்று கொடுத்துள்ளார். குழந்தைகள் டியூப் மூலம் நீச்சல் கற்ற நிலையில், திடீரென டியூப் நழுவியதால் குழுந்தைகள் நீரில் மூழ்கினர். சக்திவேல் அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்து வருவதற்குள் குழந்தைகள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்