செலவுக்கு பணம் தராததால்... தாயை அடித்தே கொன்ற கொடூரன் - அதிர வைக்கும் சம்பவம்

x

கேரளாவில் மனநலம் பாதிக்கப்பட்ட மகன், தாயை கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொச்சி சம்பக்கரா பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர், வழக்கறிஞராக பணியாற்றி வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு அவருக்கும், அவருடைய தாயார் 73 வயதான அச்சாம்மாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அவர்கள் வீட்டில் இருந்து அலறல் சத்தம் வந்ததால் அருகில் வசிப்பவர்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு வந்து பார்த்த போது, அச்சாம்மா கொலை செய்யப்பட்டு சடலமாக காணப்பட்டார். பணம் கேட்டபோது கொடுக்காததால் கோபமடைந்த வினோத், தாயாரை அடித்துக் கொன்றது தெரியவந்தது. மேலும், கொலையை மறைப்பதற்கு கேஸ் சிலிண்டரை திறந்து வைத்து விபத்தாக மாற்ற முயற்சி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து வினோத்தை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்