நக்சல்களுக்கு வைத்த கண்ணிவெடியை மிதித்த சிறுவன்.. உடல் சிதறி பலியான பரிதாபம்

x

ஜார்கண்டில் வெடிகுண்டு வெடித்த விபத்தில் 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாய்பாசாவில் நக்சல்கள் அதிகம் உள்ள பகுதிகளில் தொடர்ந்து நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பாதுகாப்புப் படையினரை பதுங்கியிருந்து தாக்க நக்சலைட்டுகள் சதித்திட்டம் தீட்டி வருகின்றனர். ரெங்கதாட்டு கிராமத்தில் அமைந்துள்ள டெண்டா வனப்பகுதியில் அவ்வாறு நிகழ்ந்த வெடிகுண்டு விபத்தில் 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சிறுவன் தன் பெற்றோருடன் இலைகளை பறிக்கவும், விறகு எடுக்கவும் சென்ற போது, தெரியாமல் வெடிகுண்டில் காலை வைத்து மிதித்த போது அது வெடித்துள்ளது. சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதையடுத்து மாவட்ட காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்