நடுரோட்டில் ரத்தம் தெறிக்க முகத்தில் தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்.. ஓவர் டேக் செய்ததால் விபரீதம்- வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

x

சாலையில் OVER TAKE செய்வதில் ஏற்பட்ட பிரச்சினையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், சைக்கிளில் வந்தவரை தாக்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பேரணாம்பட்டு சாலையில் ஒருவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ ஓட்டுநர் யுவராஜ் என்பவர் சைக்கிளில் வந்தவரை OVER TAKE செய்துள்ளார். அப்போது சைக்கிளில் வந்த நபர் நிலை தடுமாறவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆட்டோ ஓட்டுநரான யுவராஜ், சைக்கிளில் வந்தவரை பலமாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட யுவராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் ஆட்டோ ஓட்டுநர் சைக்கிளில் வந்தவரை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்