நோயாளியை கீழே இறக்குவதற்குள் திடீரென ரிவர்ஸில் வந்த ஆம்புலன்ஸ்.. டிரைவருடன் நோயாளி தூக்கி வீசப்பட்டு பலி

x

கோவை மாவட்டம் வால்பாறையில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் விபத்துக்குள்ளாகி நோயாளி மற்றும் ஓட்டுநர் உயிரிழந்தனர். வால்பாறை அருகே பாரளை எஸ்டேட் பகுதியில் இருந்து நோயாளி சிவக்குமார், அவரது மனைவி சாந்தி, மகன் மணிகண்டனுடன் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் இரவில் வந்தது. ஓட்டுநர் காளிதாஸ், பின்பக்கமாக வந்து கதவை திறந்தபோது, சாந்தி, மணிகண்டன் இறங்கினர். சிவக்குமாரை இறக்குவதற்குள் ஆம்புலன்ஸ் பின்னோக்கி சென்றது. இதில் சாந்தி, மணிகண்டன் லேசான காயமடைந்தனர். அருகில் போலீஸ் குடியிருப்பில் இருந்த தண்ணீர் தொட்டியில் மோதி ஆம்புலன்ஸ் பள்ளத்தில் விழுந்தது. சிவக்குமார் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். படுகாயமடைந்த ஓட்டுநர் காளிதாசும் உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்