ஓடும் பேருந்தில் கர்ப்பிணி மனைவியிடம் போதை ஆசாமி செய்த செயல் - ஓங்கி மூக்கை உடைத்த கணவன்

x

திண்டுக்கல்லில் கர்ப்பிணி மனைவியிடம் அத்துமீறியவரின் மூக்கை, கணவர் உடைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. '

திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்குச் செல்லும் தனியார் பேருந்தில், கர்ப்பிணி பெண்ணிடம் போதை ஆசாமி சில்மிஷம் செய்துள்ளார்.

இதனைக்கண்ட பெண்ணின் கணவர், அந்த ஆசாமியை எச்சரித்துள்ளார்.

பின்னர் பேருந்தில் இறங்கிய பிறகு பெண்ணின் கணவருக்கும், அந்த ஆசாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது பெண்ணின் கணவர் குத்தியதில், போதை ஆசாமியின் மூக்கு உடைந்துள்ளது.

பின்னர் நடந்தவற்றை அறிந்த பொதுமக்களும், அந்த ஆசாமியை தாக்கியுள்ளனர்.

தகவலறிந்த போலீசார், அந்த ஆசாமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்