வரம்பு மீறிய காதலன் - திருமணம் செய்ய சொல்லிய காதலி... அண்ணனுடன் சேர்ந்து காதலன் நிகழ்த்திய பயங்கரம்

x

தஞ்சாவூர் அருகே திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே வாத்திய நேத்தல் கிராமத்தை சேர்ந்தவர் வாசுகி. இவரும் அதே பகுதியை சேர்ந்த மாதவன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதில், வாசுகி கர்ப்பமாண நிலையில், மாதவனிடம் திருமணம் செய்ய வற்புறுத்தியதால், இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில், வாசுகியை சமாதானம் செய்து வைப்பது போல் அழைத்த மாதவன், அவருடய சகோதரர் மற்றும் நண்பருடன் சேர்ந்து குளத்தில் முழ்கடித்து வாசுகியை கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில் மாதவனும், அவரது சகோதரர் திருக்கண்ணனும் கைது செய்யப்பட்ட நிலையில், மாதவனின் நண்பர் புண்னிய மூர்த்தி என்பவர் திருவையாறு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இதை தொடர்ந்து, விசாரணைக்காக திருச்சி மத்திய சிறையில் புண்ணியமூர்த்தி அடைக்கப்பட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்