ஜி 20-ஐ சீர்குலைக்க சதி...எல்லையில் குவிக்கப்படும் தீவிரவாதிகள்..கூட்டு சதியில் பாக் ராணுவம்

x

இந்தியாவுடனான எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே பாகிஸ்தான் ராணுவம், அதிக அளவிலான தீவிரவாதிகளை குவித்து வைத்திருப்பதாக இந்திய பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறியுள்ளன. உளவுத்துறையின் எச்சரிக்கையின்படி நீலம், லீபா மற்றும் ஜீலம் பள்ளத்தாக்கு பகுதிகளிலிருந்து இந்திய எல்லைக்குள் நுழைவதற்காக, பல்வேறு குழுக்களாக அத்தீவிரவாதிகள் காத்திருப்பதாகவும் பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறியுள்ளன. காஷ்மீரில் வரும் 23, 24 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள ஜி- 20 கூட்டத்தை சீர்குலைப்பதற்காக, தீவிரவாதிகள் தயார்நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ள அந்த வட்டாரங்கள், இந்திய பாதுகாப்பு படையினர் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாதிகளின் செயல்பாட்டை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்