அதிமுக பேரணியால் பயங்கர ட்ராபிக்.. "வாந்தி வருவதுபோல் உள்ளது" - சோர்வோடு கதறிய வாகன ஓட்டிகள்...

x

சென்னையில் அ.தி.மு.க.வினர் பேரணி காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், ஆளுநரிடம் மனு அளிப்பதற்காக, ஆளுநர் மாளிகை நோக்கி இன்று பேரணி நடத்தப்பட்டது. இதன் காரணமாக காலை முதலே அ.தி.மு.க.வினர் குவிந்ததால் அண்ணா சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பனகல் மாளிகையில் இருந்து ஆளுநர் மாளிகை செல்லும் சாலையில் போக்குவரத்து முடங்கியதால், பொதுமக்கள் மற்றும் பணிக்குச் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மறைமலை அடிகளார் பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.


Next Story

மேலும் செய்திகள்