மனைவி குளிப்பதை எட்டி பார்த்த நண்பனை ஊற்றி கொடுத்து அடித்து கொன்ற கணவன் - தென்காசியில் பயங்கரம்

x
  • செங்கோட்டை அருகே கட்டளைக் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன்.
  • இவருக்கும் இவரது மனைவிக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
  • இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஒருவரும், ஐயப்பனும் ஒரே இடத்தில் வேலை செய்து வந்த நிலையில், இருவரும் இரவில் ஒன்றாக மது அருந்தி வந்துள்ளனர்.
  • இதில், அந்த நபரின் மனைவி குளிப்பதை ஐயப்பன் எட்டிப்பார்த்ததாக கூறப்படுகிறது.
  • இதையறிந்து ஆத்திரமடைந்த அந்நபர் தன் நண்பர் ஒருவரை அழைத்து, ஐய்யப்பனை மது அருந்த அழைத்துள்ளார்.
  • அங்கு, மது அருந்திக் கொண்டிருந்த போது, இருவரும் கட்டையால் அடித்ததில் ஐயப்பன் சம்பவ இடத்திலயே உயிரிழந்துள்ளார்.
  • இதையடுத்து, தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
  • இதனிடையே, தலைமறைவான இருவரையும் போலீசார் கைது செய்த நிலையில், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்