"குமரி-காசி வரை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோயில்கள்" - சேகர் ரெட்டி தகவல் | Tirupathi | Temple

x

சென்னை தி.நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோயில் குடமுழுக்கு விழா வரும் 17ம் தேதி நடைபெற உள்ளதாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களுக்கான ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டி தெரிவித்துள்ளார். பத்மாவதி தாயார் கோயிலை பார்வையிட்ட அவர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து, குடமுழுக்கு விழா வரும் 17ம் தேதி காலை 7.30 மணியில் இருந்து 7.44க்குள் மணிக்குள் நடைபெறும் என தெரிவித்தார். மேலும், திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில்களில் முதல் முறையாக பத்மாவதி தாயாரை மூலவராக வைத்து கட்டப்பட்ட கோயில் இதுவென தெரிவித்த சேகர் ரெட்டி, குடமுழுக்கு முடிந்த பின்பு 11 மணி முதல் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்யலாம் என தெரிவித்தார். அத்துடன், தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில் புதுப்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்


Next Story

மேலும் செய்திகள்