சுறாவின் வயிற்றுக்குள் உடல் பாகம்! - டாட்டூவை வைத்துக் கண்டறிந்த உறவினர்கள்

x

அர்ஜெண்டினாவை சேர்ந்த டியாகோ பாரியா என்ற 32 வயது இளைஞரை கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி முதல் காணவில்லை.

விசாரணையில் , அன்று அவர் தென் சுபுட் மாகாணத்தில் உள்ள கடற்கரையோரம் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மீனவர்களை பிடித்து விசாரித்த போது, டியாகோ பயணித்த இருசக்கர வாகனம் கிடந்த இடத்திற்கு அருகே மூன்று சுறாக்கள் பிடிபட்டதாக தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, சுறாவை சுத்தம் செய்த போது, சுறாவின் வயிற்றுக்குள் டியாகோவின் உடல் பாகங்கள் இருப்பது தெரியவந்தது.

டியாகோவின் டாட்டூவை வைத்து அது டியாகோவின் உடல் தான் என அவரது குடும்பத்தினர் அடையாளம் காட்டிய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்