சாம்பியன் பட்டத்தை தட்டித் தூக்கிய தமிழக வீராங்கனைகள்

x

தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஹரியானா அணியை 2க்கு 1 என்ற கோல் கணக்கில் தமிழகம் வீழ்த்தியது. தமிழக அணி சார்பில் இந்துமதி மற்றும் பிரியதர்ஷினி தலா ஒரு கோல் அடித்தனர். ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற தமிழகம், 2வது முறையாக தேசிய மகளிர் கால்பந்து தொடரில் சாம்பியன் ஆகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்