அமர்நாத் யாத்திரையில் சிக்கிய தமிழக யாத்ரீகர்கள்... முதல்வர் உத்தரவின் பேரில் பத்திரமாக மீட்டு பாசத்துடன் வரவேற்ற அமைச்சர்

x

அமர்நாத் புனித யாத்திரை சென்று நிலச்சரிவில் சிக்கிய தமிழக யாத்ரீகர்கள், தங்களை மீட்குமாறு தமிழக அரசுக்கு வீடியோ மூலம் கோரிக்கை விடுத்தனர். முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி, அமர்நாத்தில் சிக்கிய தமிழக யாத்ரீகர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் வந்தடைந்தனர். அவர்களை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். அவர்கள் சொந்த ஊர் செல்ல, அரசு செலவில் சொகுசு கார்கள் ஏற்பாடு செய்து அவரவர் ஊர்களுக்கு அமைச்சர் வழியனுப்பி வைத்தார். இதனால் மனம் மகிழ்ந்த யாத்ரீகர்கள், தமிழக அரசுக்கும், அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். அப்போது தமிழக அரசு ஹஜ் கமிட்டி உறுப்பினர் நாகூர் நஜ்மூதின் உடனிருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்