'சண்டே சாப்பாட்டுக்கு மீன் இல்லைனா எப்படி..?' காசிமேட்டில் குவிந்த மக்கள் கூட்டம்..

x

இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் காசிமேடு மீன் சந்தையில் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான விசை படகுகளில் மீனவர்கள் இன்று அதிகாலை கரைக்கு திரும்பிய நிலையில் பெரிய வகை மீன்கள் வரத்து அதிகமாக காணப்பட்டது. வஞ்சிரம், வவ்வால், பாறை, உள்ளிட்ட மீன்கள் விலை குறைவாகவே இருந்தது. அதிகாலை 2 மணி முதலே சுற்று வட்டார பகுதியில் உள்ள மீன் பிரியர்கள் மீன் வாங்க வந்ததால் காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதி நீண்ட நாட்களுக்கு பிறகு திருவிழாவைப் போல் காட்சியளித்தது. வஞ்சிரம் 900 ரூபாய்க்கும், கொடுவா 600 ரூபாய்க்கும், சீலா-சங்கரா - பாறை தலா 500 ரூபாய்க்கும், இறால் 400 ரூபாய்க்கும், நண்டு 300 ரூபாய்க்கும் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்