கொடைக்கானலில் கோடை விழா - மறைந்த நடிகர் ஜெமினி கணேசனின் மகளுக்கு கிடைத்த பரிசு

x

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெற்று வரும் கோடைவிழாவின் மூன்றாம் நாளில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பரதநாட்டியம், சிலம்பம் போன்ற நிகழ்ச்சிகளும், விளையாட்டு போட்டிகளும், இசை நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதில் வெற்றிபெற்ற சுற்றுலா பயணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த பூந்தோட்டத்திற்கான பரிசினை, மறைந்த நடிகர் ஜெமினி கணேசனின் மகள் கமலா செல்வராஜ் தட்டிச் சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்