ரசாயன ஆலையில் திடீர் வாயுக்கசிவு... மயங்கிய 4 பேர் மருத்துவமனையில் அனுமதி

x

சென்னை கொடுங்கையூரில், ரசாயன உற்பத்தி செய்யும் கம்பெனியில் வாயு கசிந்ததில், 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாஸ்திரி நகர் விரிவாக்கம் பகுதியில் தனியார் ரசாயனம் உற்பத்தி செய்யும் கம்பெனி இயங்கி வருகிறது. அங்கு வைக்கப்பட்டிருந்த உருளையில் இருந்து ரசாயனம் எதிர்பாராத விதமாக வெளியேறியுள்ளது.

இதன் விளைவாக பணியில் இருந்த வெங்கடேசன், அமுதவல்லி, தேன்மொழி மற்றும் சுரேஷ் ஆகிய 4 பேர் மூச்சுவிட முடியாமல் மயங்கி கீழே விழுந்தனர்.

தகவலின் பேரில் வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார், 4 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்