அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் திருமணம்... மழை வேண்டி வினோத வழிபாடு - திருமண வைபவத்தில் ஏராளமானோர் பங்கேற்பு

x

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே மழை வேண்டி அரசமரத்துக்கும், வேப்ப மரத்திற்கு திருமணம் செய்து வைத்து, கிராம மக்கள் விருந்து வைத்தனர்.

சிதம்பரபுரம் கிராமத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் உள்ள இந்த மரங்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது

. சிறப்பு பூஜைகளும், அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடத்தப்பட்டு, இரு மரங்களுக்கும் மஞ்சளால் ஆன மாங்கல்யம் கட்டப்பட்டது.

பின்னர் பொதுமக்களுக்கு பிரசாதமாக மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, உணவு விருந்து உபசரிப்பும் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்