தூங்கும் இடம் தொடர்பாக தகராறு - கோயில் வாசலில் யாசகம் பெரும் முதியவர் படுகொலை.. ஸ்ரீரங்கத்தில் அதிர்ச்சி

தூங்கும் இடம் தொடர்பாக தகராறு - கோயில் வாசலில் யாசகம் பெரும் முதியவர் படுகொலை.. ஸ்ரீரங்கத்தில் அதிர்ச்சி
x
திருச்சி ஸ்ரீரங்கம் உத்திரவீதி வெள்ளை கோபுரம் அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெயர், விலாசம் தெரியாத முதியவர் ஒருவர் அந்தப் பகுதியில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்தார்.


ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் நேற்று இரவு அந்த முதியவர் அருகே படுக்க சென்றபோது இருவருக்கும் இடையே எழுந்த தகராறால் ஆத்திரமடைந்த முருகேசன் முதியவரின் தலையில் சிலாப் கல்லை போட்டு கொலை செய்தார்.




கொலை செய்த முருகேசனை கைது செய்த ஸ்ரீரங்கம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்