ஓட்டலில் கார் வெடிகுண்டு தாக்குதல்..9 பேர் துடி துடித்து பலி - சோமாலியாவில் பயங்கரம்

x

சோமாலியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிஸ்மாயோ நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் பயங்கரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர். தொடர்ந்து ஓட்டல் உள்ளே சென்று தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதல்களில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 47 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். ஓட்டலில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு அல்கொய்தாவுடன் தொடர்புடைய அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்