நள்ளிரவில் மக்களை அதிர வைத்த கண்ணாடி விரியன் - நெல்லையில் அதிர்ச்சி

x

அம்பை அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த இரண்டு விஷப்பாம்புகளால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் அகஸ்தியர் பட்டி குடியிருப்பு பகுதியில், கொடிய விஷம் கொண்ட இரண்டு பாம்புகள் புகுந்ததாக, நள்ளிரவில் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் 6 அடி நீளம் கொண்ட 2 கண்ணாடி விரியன் பாம்புகளை லாவகமாக பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்