ஜல்லிக்கட்டு மாடுகளை கடத்திய கும்பல்.. - சோதனை சாவடியில் போலீசாரை அடித்து தூக்கிய பரபரப்பு சிசிடிவி காட்சி

x

மதுரையில் ஜல்லிக்கட்டு மாடுகளை வாகனத்தில் கடத்தி சென்ற கும்பல், தடுக்க முயன்ற காவல் அதிகாரிக்கு காயம் ஏற்படுத்திவிட்டு தப்பி செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.

மதுரையில் ஜல்லிக்கட்டு மாடுகளை கடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால், கடத்தலைத் தடுப்பதற்காக மாநகர் எல்லை பகுதிகளில் வாகன சோதனையை போலீஸார் தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில், எஸ்.எஸ். காலணி நகரில் மாடுகள் கடத்தியுள்ளனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த‌தும், கூடல் புதூர் சோதனை சாவடியில், தடுப்புகளை அமைத்து வாகனத்தை நிறுத்த காவலர்கள் முயன்றனர்.

ஆனால், வேகமாக வந்த வாகனம், இரும்பு தடுப்பை மோதி தள்ளிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், இரும்பு தடுப்பு மோதியதில் எஸ்.ஐ. தவமணி காயமடைந்தார்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, மோதிவிட்டு நிற்காமல் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்