பெரியார் சிலையை அகற்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை... சிவகங்கை மாவட்ட நிர்வாகம் அதிரடி

x

காரைக்குடியில், வீட்டின் வளாகத்தில் நிறுவப்பட்ட பெரியார் சிலை அகற்றப்பட்ட விவகாரத்தில், தாசில்தார் மற்றும் டிஎஸ்பி பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த கோட்டையூர் பகுதியில், திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் தனது வீட்டின் சுற்று சுவரில் பெரியார் சிலை அமைத்து இருந்தார்.

இதுகுறித்து, பாஜக நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில், போலீசார் உதவியுடன் தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் பெரியார் சிலையை அகற்றினர்.

மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக சிலையை அகற்றியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பெரியார் சிலையை அகற்றிய காரைக்குடி தாசில்தார் கண்ணன் மற்றும் தேவகோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் கணேஷ் குமார் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்