5 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை... தனியார் பள்ளியில் கல்வி அதிகாரிகள் நேரில் அதிரடி ஆய்வு

x

விருத்தாச்சலம் தனியார் பள்ளியில், 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முதன்மை கல்வி அலுவலர் அந்த பள்ளியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 5 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி தாளாளர் பக்கிரி சாமி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தனியார் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்