விமானப்படை அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு "போலீசார் விசாரணையை தொடர அவசியமில்லை"

x

முப்படைகளுக்கான பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தொடர்பான புகார் குழுக்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டுமென, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையில் உள்ள விமானப்படை கல்லூரியில், பயிற்சி வகுப்புக்கு வந்த விமானப் படை பெண் அதிகாரியை, சக அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்ததாக, கடந்த 2021ம் ஆண்டு புகார் தெரிவிக்கப்பட்டது. ராணுவ நீதிமன்றத்தின் விசாரணை திருப்தி அளிக்காத நிலையில், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட விமானப்படை அதிகாரி கைது செய்யப்பட்டதை அடுத்து, கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் குற்றம்சாட்டப்பட்டவர் ஒப்படைக்கப்பட்டார். இதை எதிர்த்து கோவை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ராணுவ நீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் நிலையில் போலீசார் விசாரணையை தொடர அவசியமில்லை எனவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தேவையில்லை எனவும் உத்தரவிட்டுள்ளது. மேலும், விமானப் படை பெண் ஒருவர், பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக போராட தைரியம் இல்லாவிட்டால், வேறு யாருக்கு இருக்கும் என கேள்வி எழுப்பிய நீதிபதி, ராணுவம், கடற்படை, விமானப் படைகளிலும், பணியிடங்களில் பெண்களுக்கான பாலியல் புகார் குழுக்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்