செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் இடங்களில் சோதனை நிறைவு

x

கொங்கு மெஸ் உணவகம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றது.

அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்கு தொடர்புடைய நண்பர்கள், ஆதரவாளர்கள் வீடு, அலுவலகம் என 10 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில், தற்போது அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்துக்கு சொந்தமான மாயனூர் பண்ணை வீடு மற்றும் ராயனூரில் உள்ள கொங்கு மெஸ் மணி வீடு, வெள்ளியணை பகுதியில் உள்ள அவரது பண்ணை வீடு, கொங்கு மெஸ் உணவகம், ராமவிலாஸ் வீவிங் ஃபேக்டரி என ஐந்து இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை முடித்து சென்றுள்ளனர். கொங்கு மெஸ் உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த சீலை அகற்றிவிட்டு சோதனை நடத்திய அதிகாரிகள் இரவு 7.00 மணி அளவில் சோதனையை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்