ஆவின் நிறுவனத்தின் மூலம் குடிநீர் விற்பனை? - தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்

x

ஆவின் நிறுவனத்தின் மூலம் குடிநீர் விற்பனையில் ஈடுபடப்போவதாக அரசு அறிவித்திருப்பது எந்த வகையில் நியாயம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை விட்டு விட்டு, அரசே விற்பனையில் ஈடுபடக் கூடாது என்று அப்போது எதிர்க்கட்சியாக இருந்த போது கூறிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தற்போது ஆவின் நிறுவனத்தின் மூலம் குடிநீர் விற்பனை செய்யப் போவதாக அறிவித்திருப்பது, சந்தேகத்தை எழுப்புகிறது என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்