ரூ.30 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்.. கடத்தல்காரர்களையே மிஞ்சிய போலீஸ்

x

சென்னையில் 30 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை பறித்த ஆயுதப்படை காவலர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த அழகுராஜா, சிங்கப்பூரிலிருந்து நேற்று முன்தினம் விமானம் மூலம் சென்னைக்கு வந்து, பின்னர் மண்ணடி சென்றுள்ளார். அங்கிருந்து 30 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்துடன் திருவல்லிக்கேணி சென்றபோது, காக்கி சீருடையில் இருவர் நின்று கொண்டிருந்தனர். தாங்கள் போலீஸ் எனக்கூறி அழகுராஜாவை வழிமறித்து சோதனை செய்து, 30 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். தனது இருசக்கர வாகனத்தில் விசாரணைக்காக அழகுராஜாவை காவலர் அழைத்து சென்றார். பின்னர் அழகுராஜாவை இறக்கிவிட்டு 30 லட்சம் ரூபாயுடன் காவலர் தப்பிச் சென்றார். இதுகுறித்து அழகுராஜா அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதன்பேரில் 30 லட்சம் ரூபாயுடன் தப்பிய இருவரை கைது செய்தனர். விசாரணையில், ஆயுதப்படை காவலர் செந்தில் மற்றும் அவரது நண்பர் டைசன் என்பது தெரியவந்தது. செந்தில் ஹவாலா பணத்தை பறித்துச் சென்றதும் தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்