சங்கரன்கோவில் அருகே, தொழிலதிபர் வீட்டில் 53 சவரன் நகை, வைரம் திருடியது தொடர்பாக பணிப்பெண், அவரது கணவர் கைது செய்யப்பட்டனர்.

x
  • திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்த ரகுபதி என்ற தொழிலதிபர், குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு, வீடு திரும்பினார்.
  • குடும்ப உறுப்பினர்கள் அணிந்திருந்த நகைகளை கழற்றி பீரோவில் வைத்து விட்டு, அவற்றை சரிபார்த்த போது, ஒரு வைர கம்மல், 53 சவரன் நகை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
  • இது குறித்த புகாரின் பேரில், ரகுபதி வீட்டில் பணியாற்றிய மகேஸ்வரி என்பவரிடம் போலீசார் விசாரித்தனர்.
  • முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தால் சந்தேகமடைந்த போலீசார், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், நகைகள் திருடியதை ஒப்புக் கொண்டார்.
  • பின்னர், 53 சவரன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார், மகேஸ்வரி, அவரது கணவர் துளசி ஆகியோரை கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்