வண்டி வண்டியாக மணல் திருடி நகராட்சி கட்டிடப் பணிகளுக்கே விற்பனை..ஒட்டன்சத்திரத்தில் பரபரப்பு

x

திண்டுக்கல் மாவட்டம் நவகானி பகுதியில் உள்ள குளத்தில் மழைநீர் தேக்கிவைக்கப்பட்டு, பின்பு பாசன வசதிக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், சமூக விரோதிகள் சிலர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி 50க்கும் மேற்பட்ட கனக வாகனங்களை வைத்து மண் அள்ளி, நகராட்சி கட்டிடப் பணிகளுக்கு விற்பனை செய்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். மேலும் குளத்தில் குடிநீருக்காக அமைக்கப்பட்ட போர்வெல் மின்மோட்டார் கட்டிடங்களையும் சேதப்படுத்தி மண் அள்ளி வரும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்குபடி கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்