மீண்டும் மீண்டும் நடக்கும் அதே சம்பவம்..தண்டவாளத்தில் இருந்து விலகிய ரயில் சக்கரம்

x

மேற்கு வங்கத்தில் ரயிலின் சக்கரம் தண்டவாளத்தைவிட்டு, விலகியதால் பரபரப்பு ஏற்பட்டது. மிட்னாபூர்-ஹவுரா இடையேயான பயணிகள் ரயிலின், கடைசி பெட்டியின் சக்கரம், தண்டவாளத்திலிருந்து விலகியுள்ளது. இருப்பினும் ரயில் மெதுவாக இயக்கப்பட்ட காரணத்தினால், நல்வாய்ப்பாக எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்